நமக்கு உருக் கொடுத்து..,
கருவறைக்குள் வைத்து காவல் காத்த..,
தாயும் தந்தையுமா.., தெய்வங்கள்..,??
உதிரத்தை வியர்வையாய் விதைத்து..,
கருவறை உயிர்க்கும் உணவளித்த..,
உலகழந்த உழைப்பாளிகளும் தெய்வங்கள்..,
கடவுள் எனும் உழைப்பாளி..,
கருவறையில் செதுக்கிய உயர்வே நீ..,
மனிதனெனும் உழைப்பாளி..,
நிலவறையில் செதுக்கிய உணவை..,
ஓராயிரம் கைகளில் தவழ வைத்தாய் நீ..,
வியர்வையை பதியமிட்டு..,
நீ ஊன்றி விட்ட விதை மொட்டு..,
வீறு நடைப் போட்டு..,
என்னை விதைத்த கடவுள் எங்கே எனக் கேட்டு..,
உழைப்பாளி உன் பாதம் தொட்டு..,
வணங்கும் நாள் வரும் பாராட்டு..,
கணிணியும்.., கட்டுத் தறியும்..,
உன் விரல் மெட்டுக்களில் இசை பாடட்டும்.,
மனிதனின் மகத்துவம்..,மண்ணின் தனித்துவம்
விரைவிலே உழைப்பில் உயர்வாகட்டும்..,
உழைக்கும் வர்க்கங்கள் இருக்கும் வரை..,
உலகம் இருக்கும்..,
உலகப் பந்து இருக்கும் நாள் வரை..,
உழைப்பும் உயிர்க்கும்..,
உழைப்பின் வலிமை புரியும் போது..,
உயிர்கள் உருகும் ஓசை கேட்கும்..,
உழைப்பாளி..,
எங்கள் உயிர்ப் பை நீ..,
விதைப்பாய்..,
எல்லோர் மனங்களிலும்..,உயர்வாய் நீ..,
உமா
நாராயண் (குமரி உத்ரா)
கருவறை உயிர்க்கும் உணவளித்த உழைப்பாளி
ReplyDeleteஅருமை
உழைப்பின் உன்னதம் சொல்லும் உள்ளம் தொட்ட வரிகள்
அன்பின் நன்றிகள்.... சகோதரா...
ReplyDelete