Monday, April 13, 2020

சித்திரையே வருக.,!!















சித்திரையே..,
ஏன்
விசித்திரமாய்
பார்க்கிறாய்..??


2020 என்று.,
இறுமாப்புடன்
நிமிர்ந்த போது..,
உலகமெங்கும் 🌏
கிடைத்தது
ஒரு முகமூடி..!!


சாணத்தால் வீடு மெழுகி.,
அரிசி "மா " கோலமிட்டு.,
முக்கூட்டு அடுப்பில்.,


சோறு, குழம்பு, அவியல்.
தழைய, தழைய..,
கொதித்தபோது.,


வீட்டில்
பூனை உறங்கும்..,
எலி உறங்கும்..,
வைரஸ்  வந்து..,
உறங்கியதில்லை..!!


தேர் மஞ்சள்..,
கல்லிழைத்து..,
பட்டு முகத்தில் பூசி.,
தலைக்கு குளித்து.,


கண்ணாடி..,
பார்த்த போது.,
கண்ணடி வந்து சேரும்..,
கோவிட் 19
வரவில்லை..!!


ஏர் கூட்டி.,
நாத்து நட்டு..,
களை பறித்து.,
நெல் கதிரும்.,
தலை சாய்த்து..,


பூமித் தாயும்..,
பச்சை ஆடை..,
உடுத்தி.,
பகட்டாய்..,
சிரித்த போதும்..,


சேற்றங்காலில்.,
கால் நனைத்து.,
விவசாயம்..,
பார்த்த போதும்.,


உயிரில்லா..,
பூச்சிகள்.,
உயிர் பறிக்க..,
வரவில்லை..!!


சீமை நெல்லியும்.,
மா வடுவும்.,
நொண்டங்காயும்.,
காரங்காயும்.,


நரிப்பயறும்.,
நாவல்பழமும்.,
"கை" கழுவாத.,
பத்து விரல்களில்.,
இனித்தபோது கூட..,


கொரோனா.,
உள்ளங்கையில்.,
பரவவில்லை...!!


நாலு கட்டு வீட்டிற்குள்.,
நாலு தலைமுறை.,
வாழையடி.,
வாழையாக..,
கூடி வாழ்ந்து..,


ஒரு டஜன் பிள்ளைகள்.,
ஓடி ஆடி.,
விளையாடியும்.,
மூச்சு விடக்கூட..,
ஒரு கிருமி..,
வந்ததில்லை..!!


இப்போது மட்டும்.,
ஏன்.,
சீறி வருகிறது.,
கொரோனா..??


சித்திரையே..,
முரசு கொட்டு.,
எத்திக்கும்..,!!



காற்றும் மாசு பட்டு.,
காசும் மாசு பட்டு.,
ஊரும் மாசுபட்டு..,
உள்ளமும் மாசுபட்டு..,


உதவாத வாழ்க்கைக்கு.,
முற்றுப் புள்ளியல்ல..,
இது..,
முதற் புள்ளியாக.,
இருக்கட்டும்.,!!


உலகம் 🌏.,
திருந்த.,
ஒரு சந்தர்ப்பம்.,
தருகிறது கொரோனா..,!!


திருந்துவோம்..!!
திருத்துவோம்..,!!
தமிழ் புத்தாண்டு..,
வாழ்த்துக்களோடு..,!!



             உமா நாராயண், ( குமரி உத்ரா )

Saturday, March 7, 2020

உலகம் எனும் ஓவியம்..,!!!


















உலகம் எனும் ஓவியம்..,
பெண்களால் அழகு பெறுகிறது..,!!


மங்கைக்கு ஒரு வாழ்த்து
மலரே உனக்கொரு பாராட்டு..,!!


நிலவென்று வர்ணித்த..,
நிலாக்காலம் போய்..,


அந்த நிலவையே சுற்றி வந்து..,
நீல் ஆம்ஸ்ட்ராங்கை..,
நினைக்க வைத்தவள் நீ..,!!


இலக்கியங்களில் உலா வந்த..,
நாட்கள் போய்..,


நாட்டுக்கும், வீட்டுக்கும்..,
உயிர் எழுத்தானவள்  நீ ..,!!


முள்ளில் தான் வாழ்க்கை..,
என்றாலும்..,
முடிந்து  போகாமல்..


சீறி  நடை போடும்..,
சிங்கப் பெண்ணானவள்  நீ..,!!


புள்ளிகள் தவறி..,
கோலங்கள் பிரிந்தாலும்..,
புதையாமல்..,


சமுதாயத்தை சீர் திருத்தும்..,
ரங்கோலி பெண்ணாய் நீ..,!!


மண்ணை தட்டி முளைத்து நிற்கும்..,
விதைகள் போல..,


விண்ணை தட்டி..,
உயர்ந்து  நிற்கிறாய்..,!!


தாகம் தீரா நதிகள் போல..,
லட்சியம் எனும்..,


கடல் நோக்கி..,
விரைந்து செல்கிறாய்..,!!


ஒளி விளக்காய் பிரகாசம் தந்து..,
குடும்பத்தை அரவணைத்து செல்லும்..,


பெண் என்னும்..,
தேவதைகளே..,



உலகம் எனும் ஓவியம்..,
உங்களால் தான் அழகு பெறுகிறது..,!!


        உமா,  குமரி உத்ரா.








  

Thursday, March 7, 2019

பெண்ணே பெருமை கொள்..,!!!








பெண்ணே பெருமை கொள்..,
பெண்ணாய் பிறந்ததற்கு..,!!


வாசம் வீசிய மலர்கள் கூட..,
உனைப்பார்த்து..,
மௌன மொழி பேசட்டும்..,!!

விண்ணில் நீந்தும்..,
வெண்மதியும்..,
உனைக் கண்டு வியக்கட்டும்..,!!

ஆர்ப்பரிக்கும் கடலலை கூட.,
கொலுசு கால்களில்
சரணடையட்டும்.,

இதமாய் வீசும்.,
தென்றல் காற்று கூட.,
வீச மறந்து சுவாசம் முட்டட்டும்.,


மண்ணை  முட்டி முளைத்து
நிற்கும்  விதைகள் போல..,
நீயும்  விண்ணை தட்டி உயர்ந்து  நிற்கிறாய்..,!!


 வாழ்க்கை எனும் நாலெழுத்தில் மடங்கி
போகாமல்.,
வளர்ச்சி எனும்., பாதையில்
 நீ தனித்துவம் பெற்றாய்.,!!


தாகம் தீரா நதிகள் போல.,
லட்சியம் எனும் கடலை நோக்கி..
நீ  விரைந்து  செல்கிறாய்..,!!


இங்கே மகுடம் சூட்ட.,
மணிமுடி தரிக்க.,
யாருக்கும் நேரமில்லை.,


கவரி மான்களுக்கு .,
இங்கே  கர்வமில்லை..,

பெண்ணுக்குங்கே.,
 வீழ்ச்சியில்லை..,!!


பெண்ணே  பெருமை கொள்.,
பெண்ணாய் பிறந்ததற்க்கு..,!!




                உமா நாராயணன்., (குமரி உத்ரா )


Tuesday, March 5, 2019

புவியோடு பேசுவோமா..,!!!





குயில் கானம் பாடி.,
சேவல் கூவி.,
காக்கை கரைந்து.,
பட்க்ஷிகள் பறந்து.,


சாண முற்றத்தில்..,
கால் தோய்த்து.,
அமைதியான.,
அதிகாலை விடியல்.,


சுத்தம் தந்து.,
சுவாசம் தந்து.,
நெஞ்சம் நிறைத்து.,
கொஞ்சும் புவி...,!!


சிறு தூறல் ரசித்து.,
வானவில் பார்த்து.,
மேனி தழுவ.,
ஓடும் தண்ணீரில்.,


மழையோடு
மனசாரப்பேசி..,
குளித்து, குதூகலித்து.
மறு நாள் விரியும்.,


குடைக் காளானில்.,
முகம் பார்த்து.,
மகிழ்ந்த புவி..,!!


கார் மேகம் காணாது.,
வெப்பக்
கூட்டுக்குள்.,
விதைகள் நசுங்கி..,


நா வறண்டு.,
மேனி வெடித்து..,
மழை என.,


 எழுதிப் பார்த்து., 
வானம் பார்த்து.,
வெம்பும் புவி..,!!


வெறுமை ஓட்டில்.,
கடலை வறுப்பது போல்.,
காய்ந்த வெயிலில்.,
தீய்ந்து தேய்ந்து.,



பச்சை மரங்களை.,
இச்சையாய்.,
எதிர்பார்த்து.,
நிச்சயமாய்., நிர்கதியான..,


நம் வாழ்வை.,
சொல்லாமல்.,
சொல்லும் புவி..,!!


வற்றிப்போன.., 
ஆறுகளும்., 
மூடிப்போன.,
குளங்களும்.,


நெகிழிகள் கடலோடு.,
கலக்கும் அபாயமும்.,
கை பேசிகளின்.,
பரிமாணமும்.,


வாகனப் புகை..,
வளையமும் சேர்ந்து.,
சுவாசம் அற்று.,


நுரையீரல் தேய்ந்து.,
நம்மை பார்த்து.,
கதறும் புவி...,!!


புவியின் கதறலில்
இன்று கடந்து தான்.,
போகிறது.,


கட்டிய அபார்ட்மென்ட்டும்
சேர்த்து   அணைத்த    
செல்பேசியும்.,
ரோஸ் மில்க் பணக் கட்டும்.,
பக்கமிருக்க.,



நாளை நம் தலைமுறை
இருக்குமா...???
புவியின்  வெப்பத்தில்..,!!



                உமா நாராயணன்.(குமரி உத்ரா)

Monday, January 14, 2019

தை மகள் வந்தாள்..,!!



தையல்  அவள்
வானவில் வண்ணம் குழைக்க.,
தூரிகை எடுத்தாள்.,!!

அத்திப் பூவாய்..,
அகம் மலர்ந்தாள்,!!

தித்திக்கும் தை மாதத்தில்.,
முதலடி வைத்தாள்.,

பச்சரிசி பொங்கலும்.,
இள   மஞ்சளும்.,

சேதி கேட்ட செங்கரும்பும்., 
கதிரவனை தேடின.,!!

பொங்கலோ பொங்கல் என,
பூரித்துப் போயின..,!!

நெற்கதிர்கள் நாணின..,!
ஏறும் கலப்பையும்  வீரம் பூட்டின.,!!

கொம்புகளில் வர்ணம் தீட்டிய
மாடுகள் மகிழ்ந்தன.,!!

பொங்கட்டும் பொங்கல்.,
தங்கட்டும்  திங்கள்.,!!

பொழியட்டும் வானம்..,
விளையட்டும் விளைச்சல்.,!!

செழிக்கட்டும் தேசம்.,
நிலைக்கட்டும் நேசம்.,!!


                       உமா நாராயண். (குமரி உத்ரா)








Monday, December 10, 2018

மறந்த முகவரியும்.., சில மனித முகங்களும்..,!!



பிறந்த போது தாயிடம் என்னை  கையளித்த செவிலி..,!

பள்ளி சென்ற முதல் நாள் தூக்கி  கொண்டு விட்ட  தங்கமணி அண்ணன்..,!

முதல் தமிழை  நாவில் உச்சரிக்க வைத்து உயிரோட்டம் பார்த்த அழகு பாண்டியன் சார்..,!

உழவருக்கு மதிய உணவு கொண்டு சென்று  வயல் வரப்பில் தடுமாற  கை கொடுத்த    வண்டிக்காரர்..,!

உழுது  விட்டு நெல் மணிகளை விதைத்து நாற்றுக்கு உயிர் கொடுத்த விவசாயி..,!

வாய்க்கால் கரையில் ,நண்டு துளைகளில் தென்னங் கீற்று  பரப்பி நண்டு பிடித்த குட்டி நண்பர்கள்..!

பனை மரத்தின் பதநீரை இறக்கி பனையோலை பட்டைகளில் குடிக்க வைத்த பாண்டிக்காரர்..,!

நரிப்பயறும்., நாவல் பழமும்., காரங்காவும்., ஈச்சம் பழமும் அணிலாய்
கொறிக்க சொல்லி தந்த  சின்ன சகாக்கள்..,!!

அம்பலத்திப்  பூவில் தேன் குடித்து, குளத்தின்   ஆழங்களில் நீச்சலடிக்க வைத்த ஆரம்ப கால சிநேகிதிகள்..!

வானொலியின் பதிவலையில் என் குரல் வர என்னை நெறிப்படுத்திய முதல் அறிவிப்பாளர்..!

கவிதைகள் காற்றில்  வலம் வர  செவிகளால் என்னோடு கைக்குலுக்கிய  நேயர்கள்..,!.,

திருமணத்தில் தீ வலம் வந்தபோது  மந்திரம் சொல்லிய பூணுல்
அய்யர்..,!

புகுந்த வீட்டில் மணப்பெண்ணாய்  போனபோது  உறவுகளின் சுய சரிதை சொன்ன பக்கத்து வீட்டுப் பாட்டி..,!

நானும் தாயான போது தைரியம் சொன்ன இளம்
மருத்துவர்..,!

கைகளை கூட்டி., வாய் சப்பிய  குழந்தையை குளிப்பாட்டிய வெள்ளை தேவதைகள்..!

தூரத்து ஆலயத்தில் நேர்ச்சை செய்ய போனபோது ரயிலோட்டிய முகமறியா ரயிலோட்டிகள்..,!

இன்னொரு பறவையாய் ஆகாயம் பறந்து வியந்தபோது பயணத்துக்கு பலம் சேர்த்த விமான ஓட்டிகள்.!

புது தேசத்தில்  நேசக் கரம் குலுக்கி தமிழ் தாகம் தீர்த்த., அன்பின் தமிழ்ச் சொந்தங்கள்..,!

இன்னும் எத்தனையோ..,? 
இறைவனுக்குத்தான்  தெரியும்..,

வழியில் வரப்போகும்..,
முகமறியா சில முகவரிகள்..,!!!


                                                             
                    உமா நாராயண், (குமரி உத்ரா). 




Friday, October 12, 2018

" சுத்தம் "


         


ந்தனா  வாசலை சுத்தமாகப்  பெருக்கி  கோலமிட்டாள்.  கைகள் வளைந்து  நெளிந்து கம்பிக் கோலம்  சிக்கலாகிப் போனது.  சிக்கலை சீர்படுத்தி கோலத்தை  ஒரு வழியாய்  முடித்து  வைத்தாள்.


     கோலத்தின்  நடுவே  சாணத்தை வைத்து., பூசணிப் பூவை  சிரிக்க விட் டாள்.  தன்  நெற்றிக்கு  பொட்டிட்டு, இரண்டரை  வயது  குழந்தை மதுவை   தூக்கிக் கொண்டு  சுந்தரியின்  வீ ட்டின்  முன் வந்து  நின்றாள்."

     "அக்கா,  நான் வார வரைக்கும் புள்ளையை  பார்த்துக்கக்கா. ஆயா கடையில வாங்குன  இட்லியும், இடியாப்பமும் இருக்கு . குழந்தை அழுதா  குடுத்திருக்கா."

  பால் பாட்டிலை  குழந்தை கையில் கொடுத்து  விட்டு  விடுவிடுவென  ஓரமாய் நின்குப்பை  வண்டியை , இழுத்தபடி நடந்தாள்.  


  வந்தனாவந்துட்டியா.., இரண்டு  நாளா குப்பை எல்லாம்  நிறைஞ்சுடுச்சி .., நீ எப்போ   வருவேன்னு  பார்த்திட்டு  இருந்தேன். சொன்னபடியே  பார்வதி  தட்டிய   குப்பையை  தன் வண்டியில் நிரப்பிய படி  நடந்தாள்.

  ஒவ்வொரு  வீட்டு  குப்பை   கூடைகளும்  சுத்தமாக,  சுத்தமாக   இவளும், இவள்   வண்டியும்  ழுக்காகி   கொண்டிருந்தார்கள்.

      ஒரு வழியாய் ,  குப்பை வண்டியை  ஓரம் கட்டி  வீடு நோக்கி  நடந்த போது  மனது  மரத்துப்  போனது. சுந்தரம் ன்று  எந்நிலையில்  வருவானோ..,?

      சுந்தரம்  மலிவான  மதுவை  உள்ளுக்குள்  இறக்கி  
மகிழ்வாக  இருந்தான்.

           .வீட்டிலுள்ள  பொருட்கள்  வாரியிரைத்து  சுத்தமில்லாமல்  கிடந்தது.
 அதன்  நடுவே  குழந்தை  மது  விளையாடிக்  கொண்டிருந்தது.

    குழந்தையை  தூக்கிக்      இடுப்பில்  வைத்துக்   கொண்டாள். அடுப்பை  பற்ற  வைத்து  அரிசியை  ளைந்து போட்டாள்அடுப்பை போல  மனதும் எரிந்து  கொண்டிருந்தது.

          வாசலிலே  பூசணிப்பூ  வாடி  வதங்கி  கொண்டிருந்தது.  அவள்  வாழ்க்கையைப்  போல..,!!

                                                 உமா நாராயண் , (குமரி உத்ரா )


     

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...